சுசித்திராவுக்கு பின்னால் மலேசிய கும்பல்- எவ்வாறு ரகசிய புகைப்படங்கள் கசிகிறது தெரியுமா ?



சமீபத்தில் பாடகியான சுசித்ரா தனது ரிவீட்டர் பக்கத்தி, பல சர்சைக்குரிய புகைப்படங்களை போட்டு அணு குண்டு ஒன்றை வெடிக்கவைத்தார். சிம்பு, தனுஷ், திரிஷா, செம்மயி என்று இந்த பட்டியல் நீண்டு கொண்டு சென்றது. ஆனால் இதற்கு சுசித்திராவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது என்று சென்னை பொலிஸ் வட்டாரங்களில் இருந்து சினி இதழுக்கு செய்தி கசிந்துள்ளது. சுசித்ரா பெயரில் இயங்கி வந்த ரிவீட்டர் பக்கம் முடக்கப்பட்டதோடு பல தகவல்கள் வெளியாகியுள்ளது.

மெலேசியாவில் இயங்கி வரும் கும்பல் ஒன்று. சமீபத்தில் சிங்கம் 3 படப்பிடிப்பில் நுளைந்து தகறாரில் ஈடுபட்டுள்ளார்கள். இவர்கள் சிங்கம் பட ஷூட்டிங் நடைபெற்றவேளை, அங்கே உலவி திரிந்து வித்தியாசமாக நடந்துகொண்டுள்ளார்கள். மேலும் ஒரு ரகசிய வீடியோ கமரா ஒன்றை இவர்கள் கேரவேனில் பொருத்தவும் முற்பட்டுள்ளார்கள். இதனை கண்டு பிடித்த திரைப்படக் குழுவினர். அவர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

குறித்த கும்பல் மலேசியாவில் இருந்தபடி, ஆப்பிள் போன் பாவிக்கும் பிரபலங்களை குறிவைத்துள்ளார்கள். ஏன் எனில் ஆப்பிள் போனில் நாம் எடுக்கும் அனைத்து புகைப்படங்களும் உடனே ஐ-கிளவுட் என்னும் இணையத்தில் சேமிக்கப்படுகிறது. இந்த இணையத்தை இலகுவாக ஹக் செய்ய முடியும். அப்படி ஹக் செய்தால் உங்கள் அனைத்து படங்களும் அந்தரங்க படங்களும் அவர்கள் கைகளுக்கு சென்றுவிடும். இவ்வாறு சில பிரபலங்களின் ஐ-கிளவுட் அக்கவுண்டை ஹக் செய்து சில புகைப்படங்களை எடுத்து. அதனை சுசித்திரா பெயரிக் வெளியிட்டுள்ளார்கள் என்று தற்போது பொலிசார் கண்டு பிடித்துள்ளார்கள்.

இதனால் கோடம்பாக்கம் தற்போதுதான் அமைதியான சூழலுக்கு திரும்பி பெருமூச்சு விட்டுள்ளது என்கிறார்கள்.

Previous Post Next Post

Contact Form